சைனாவுக்கு போகவேண்டுமானாலும் சைக்கிளிலேயே செல்லும் என் தந்தை என்னைப்பக்கத்து தெருவிற்குக் கூட பைக்கில் போக சொல்லுகிறார் இவரை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது?
***தேர்வு சமயங்களில் இரவு முழுவதும் படித்துக் கொண்டிருப்பதோ நான் விழித்துக் கொண்டிருப்பதோ என் தாய்!
அவளை விட்டுவிட்டா உன்னோடு ஓடி வருவது?
***அலுவலகம் செல்லும் அண்ணன் மடித்து வைத்த சட்டையை வெட்டியாய் ஊர் சுற்றபோகும் நான் அணிந்து கொண்டாலும் ஆனந்தப்படுவானே? அவனை விட்டுவிட்டாஉன்னோடு ஓடிவருவது?
***நான் செலவுக்கு பணம் கேட்கும்பொழுது – தான் நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை கூட புன்னகையோடு தருவாளே என் தங்கை!அவளை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது?
***கோபத்தில் தம்பியை அடித்துவிட அது அப்பாவரும் நேரம் என்பதால் என்னை காட்டிக்கொடுக்காமல்அழுகையை அடக்கி கொள்வானே என் தம்பி அவனை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது?
***இப்படிஎனக்காக அழுவதற்குஎத்தனையோ இதயங்களிருக்கஎன்னை அழவைக்கும் நீ எனக்குவேண்டாமடி!
உண்மையில் இது எனது கவிதையல்ல என்று நான் கூறினால் அது தன்னடக்கம் என்று நீங்கள் எண்ணக் கூடும் ஆனால் அதுதான் உண்மை.