அனுப்புனர்:
அம்மா என்றொரு அநாதை,.
பெறுநர் :
நன்றி மறந்த மகன்,
நான் வாழ்ந்த இல்லம்
பொருள் : பொருள் மட்டுமே பொருள்
ஞாபகமிருக்கிறதா மகனே?
இன்றுஅன்னையர் தினமாம்!
உனக்குஅன்னையை விட்ட
தினம்தான் ...ஞாபகத்திலிருக்கும்!
நீ என்விரல்பிடித்து நடந்த
நாட்களைகொஞ்சூண்டாவது உணர்கிறாயா?
என்னை விட்டுச்சென்றஇந்த நாளில்...
நான் உணர்கின்றேனடா...
என்னைப் பிடித்து நடைபயின்ற
அதே விரல்கள்தான் ...
என்னைஇங்கேயும் அழைத்து வந்ததை
நான் உணர்கின்றேனடா...
பள்ளி வாகனம் கண்விட்டு
மறையும் வரையிலும்,
உன்னை வழியனுப்பும் ...
விழிகளுக்குச் சொந்தக்காரி நான்!
இப்பொழுதோ உனது புதிய வாகனத்தில்
நான் கண்விட்டு மறையவேண்டுமென...
இங்கேவிட்டுச் சென்றது நியாயமா?
நீ கல்லூரி செல்லும் பொழுதும் வாசல் வரை வந்து ஊட்டிவிட்ட ...விரல்களுக்குச் சொந்தக்காரி நான்!
இங்கேவயிறாற கிடைத்தாலும்...வரிசைச் சாப்பாடுதான்!சௌக்கியமா மகனே..?
வருகிறவர்களெல்லாம் ...பரிதாபப்படுகிறார்கள்!பரிதாபப்படவேண்டிய நீயோவர மறுக்கிறாய்!
உயிலோடு இருக்கும்போது வந்தாய்
உயிரோடு இருக்கும்போது வருவாயா?
உனக்காய் எழுதி வைத்த சொத்துக்களை ...
திருப்பிக் கேட்கமாட்டேன்!
நான் செத்தால் ..என் சாம்பல் கேட்கவேனும் வா!
என் சாம்பல்ஈரப்பதமாய் இருந்தால் ...
பயந்து விடாதே!
அது நான் விட்டகண்ணீர்களின்
கலவைஅவ்வளவுதான்..!
ஒரு வேண்டுகோள் மகனே!
தயவுசெய்துஉன் மகனை ...
துணைக்கு அழைத்து வராதே!
என் மகனுக்காவது கடைசிவரை ...
தனிமையே கிடைக்க கூடாது !
மரணம் தவிர,
இப்படிக்கு,
அம்மா என்றொரு
அநாதை